ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளது; விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவோம்!: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்..!!



சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி நடை பயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிஐக்கு இந்த விசாரணை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog