Posts

Showing posts with the label #covaccine

தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது”

Image
தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது” சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.    அப்போது பேசிய அவர் , “தமிழகத்தில் இன்று நடைபெற்ற 25 வது மெகா தடுப்பு முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர்  5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 80% இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 12- 14 வயதுடையவர்கர் 4.29 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அதேபோல் 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.  தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதி