ரேஷன் வாங்க ஆதார் எண் போதும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!
ரேஷன் வாங்க ஆதார் எண் போதும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு! நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசி போது, நாட்டில் உள்ள 77 கோடி மக்கள் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த முயற்சி பிரதமர் நரேந்திர மோடி யால் கருத்தாக்கப்பட்டது. இந்த வசதியின் மூலம், புலம்பெயர்ந்த பயனாளி ஒருவர் அவர் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பெற முடியும், அதே நேரத்தில் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பிய பின் உரிமையுள்ள ரேஷனில் தங்கள் பங்கைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. பிரதமரின் முன்முயற்சியால், தொற்றுநோய்களின் போது ஒரு நபர் கூட பசியுடன் இருக்கவில்லை என்பது மகத்தான பெருமைக்குரிய வ