தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை ஆடி மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஆடிப்பூர திருவிழா வருகிற ஆகஸ்டு 1 ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற இருப்பதால் அந்த உகந்த நாளில் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். உள்ளூர் விடுமுறை: உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினமாக கொண்டாடப்படும் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூரண நட்சத்திரத்தில் அனைத்து அம்மன்களையும் வழிபடும் ஒரு சிறந்த விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் என்ற உறுதி நம்பிக்கையை கொள்ளும் ஏராளமான பக்தர்கள் கூடி கொண்டாடும் விழாவாக இந்த ஆடிப்பூர திருவிழா உள்ளது. இவ்வாறு சிறப்பு மிகுந்த இவ்விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிபூரா திருவிழா நடைபெறவில்லை. ஆனால் தற்போது ஓரளவு நோயின் தாக்கம் குறைந்துள...